ஆரோக்ய வாழ்வு வாழவேண்டுமெனில், மனிதர்களுக்கு எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறையால், எலும்புகள் வலுவிழந்து காணப்படும். தடுமாறி கீழே விழ நேரிட்டால், எலும்பு முறிவு ஏற்படும். எனவே எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
கீரை வகைகள், மீன், பால், பாலாடை, தயிர், பேரீச்சை, முட்டையில் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களில் "கார்பனேடட்' முறையில் தண்ணீர் மாற்றப்பட்டிருப்பதால், அவற்றை தொடர்ந்து குடிக்கும் போது எலும்புகள் வலுவிழந்துவிடும். இத்தகைய குளிர்பானங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment