1. பல் துலக்குவதற்கு முன், காலையில் எழுந்ததும் 160 னீறீ டம்ளர் x 4 டம்ளர் குடிக்கவும். 2. பிறகு பல் துலக்கவும், வாய் கொப்பளிக்கவும், பிறகு 45 நிமிடம் எதுவும் சாப்பிடக்கூடாது. குடிக்க வும் கூடாது. 3. 45 நிமிடங்களுக்குப் பிறகு ஏதாவது குடிக்கலாம். 4. 15 நிமிடங்களுக்குப் பிறகு ஃடிபன் சாப்பிடலாம். 5. காலை, மதியம், இரவு_டிஃபன், லஞ்ச், டின்னர் முடித்த பிறகு 2 மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடக்கூடாது. 6. வயதானவர்கள், நோயாளிகள், மேலும் ஒரே சமயத்தில் 4 டம்ளர் தண்ணீர் குடிக்க முடியாதவர்கள் ஆரம்பத்தில் ஒரு டம்ளர், பிறகு 2 டம்ளர் என படிப்படியாக அளவை உயர்த்திக் கொள்ளலாம். 7. மேற்கண்ட சிகிச்சை பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தும். தண்ணீர் சிகிச்சை மூலம் 1. உயர் ரத்த அழுத்தம்- 30 நாட்களில் குணமாகும். 2. கேஸ்ட்ரபுள் (வாயுக்கோளாறு) - 10 நாட்களில் குணமாகும். 3. சர்க்கரை நோய் - 30 நாட்களில் குணமாகும். 4. மலச்சிக்கல் (அடிக்கடி) - 10 நாட்களில் குணமாகும். 5. கேன்ஸர் - 180 நாட்களில் குணமாகும். 6. TB (டிபி) - 90 நாட்களில் குணமாகும். 7. ARTHRITIS பேஷண்ட்ஸ் இந்த தண்ணீர் சிகிச்சையை முதல் வாரத்தில் 3 நாள், மேலும் 2 வாரத்தில் தினமும் மேற்கொள்ளலாம். தண்ணீர் சிகிச்சையில் பக்க விளைவுகள் கிடையாது. ரெகுரலாக யூரின் போவதை விட இந்த சிகிச்சையால் யூரின் போகும் அளவு அதிகமாகும். உதாரணமாக ஒருநாளைக்கு 6 முறை நீங்கள் யூரின் போனால் தண்ணீர் சிகிச்சையில் அது 8 முறை ஆகும். வேறு எந்த பக்கவிளைவும் இல்லை. இந்த சிகிச்சைப்படி தினமும் தண்ணீர் குடித்து வந்தால் உங்களுக்குப் பழகிவிடும். அது ஒரு தினப்படி நிகழ்ச்சியாக மாறிவிடும். தினமும் தண்ணீர் குடியுங்கள். மேலும் ஆக்டிவாகவும், ஆரோக்கியமாகவும் வாழுங்கள். சீனர்களும், ஜப்பானியர் களும் குளிர்ந்த நீர் (Coldwater) அருந்துவதில்லை. வெந்நீரே குடிக்கிறார்கள். சாப்பிடும்போது சூடான டீ மட்டும் சேர்க்கின்றனர். நாமும் அதைப் பின்பற்றினால் நிறைய பயன் உண்டு. இழப்பதற்கு எதுவுமில்லை. அனைத்தும் லாபமே.
NAGARAJI
Welcome
Blog Archive
Followers
'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்போல், வாழை வைத்தாரை வாழ வைக்கும் வாழை என வாயார வாழ்த்தி, சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டியிருக்கும் வாழை மரம் கட்டியம் கூறுவதுபோல், இக்கட்டுரைக்குள் புக, வாழைப்பூ போன்ற இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.
மா, பலா, வாழை என முக்கனிகளுள் கடைசியாக இருந்தாலும் பலன்களை அள்ளித் தருவதில் முதலிடம் வாழைக்கே!
சுக்ரோஸ், ஃப்ருக்டோஸ், க்ளுகோஸ் என்ற மூன்று வகை சர்க்கரைச் சத்தும் நார்ச்சத்தும் சேர்ந்த வாழைப்பழம் விளையாட்டு வீரர்களுக்கு தேவையானது. பழம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் ட்ரைப்டோன் செரடோனின்களாக மாறி உற்சாகத்தை ஊட்டுகிறது. 11/2 மணி நேர உடற்பயிற்சிக்குத் தேவையான சக்தி வாழைப்பழம் தரும்.
மாதவிடாய் வருவதற்கு முன் வரும் பரீ மென்ஸ்ட்ரஸ் சின்ட்ரோம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ஙி6 விட்டமின் ரத்தத்தில் குளுகோஸ் அளவை அதிகப்படுத்தி எரிச்சல் இன்றி சாந்தடையச் செய்யும்.
இதில் உள்ள இரும்புச்சத்து இரத்தசோகையை நீக்குகிறது. பொட்டாசியம் ஹைப்பர் டென்ஷனைக் குறைக்கிறது. மூளையை சுறுசுறுப்பாக்கி புத்தியை கூர்மையாக்குகிறது.
நெஞ்சு எரிச்சல் குறையும் மலச்சிக்கல் தீரும். உணவுக்கிடையே இரண்டு பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி பசி உணர்வை ஏற்படாமல் செய்கிறது.
நரம்புத் தளர்ச்சி ஏற்படாது. ஸ்ட்ரோக்கை தடுக்கலாம். படபடப்பின்றி அமைதியாக பேச நடந்து கொள்ள உதவுகிறது.
பூவன், பேயன், ரஸ்தாலி, மலை வாழைப்பழம், செவ்வாழை, கற்பூர வாழை, மோரீஸ் என பல வகைகள் உண்டு.
பேயன் வாழைப் பழத்தை அம்மை போட்டவர்களுக்கு கொடுத்து சூட்டை வெக்கையை தணிப்பார்கள். ரஸ்தாளிப்பழம் மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதல்ல. பூவன் பழம் மலச்சிக்கலைப் போக்கும். செவ்வாழைப் பழம் சாப்பிட்டால் ரத்த விருத்தியாகும். மலைவாழைப்பழம் முதியவர்களுக்கு ஏற்றது. எளிதில் ஜீரணமாகும். கற்பூரவள்ளி சுவைமிகுந்தது. மோரீஸ் குளிர்ச்சியானது. பேயன் பழம் ருசியானது. வாழை மரம் படித்ததில்லை; கனி கொடுக்க மறந்ததா? என கண்ணதாசன் பாடியது இந்த வகைக் கனிகளைத்தானா?
ஊறுகாய்
ஊறுகாயை நாம் விரும்பி உண்கிறோம். பாடம் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் உண்ணக் கூடாது. பாடம் செய்யப்பட்ட பொருட்கள் ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த ரசாயனம் நம்மை மந்தமாக்கும். மூளையினைக் கூர்மையாக இயங்க விடாது. புட்டிகளில் விற்கப்படும் பழரசங்கள், சர்பத்துகளும் கெடுதியானவைகளே. எனவே பாடம் செய்யப்பட்ட உணவு வகைகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.
தூங்குங்கள்
இதய நோயாளிகள் சாப்பிட்ட பின் சிறிது நேரம் தூங்க, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
நரம்புத்தளர்ச்சி
தினமும் இரவு பசும்பாலில் சிறிது குங்குமப்பூவைக் கலந்து சாப்பிட்டு வந்தால், நாளடைவில் நரம்புத் தளர்ச்சி நோய் குணமாகும்.
தேனும் இஞ்சியும்
ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்து தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது இருமல் இருந்தால் குணமாக்கும்.
வாந்தி
புதினாக்கீரையை இடித்து சாறு எடுத்து அதில் சிறிது சர்க்கரையையும் சேர்த்து சாப்பிட்டால் எந்தவித வாந்தியாக இருந்தாலும் அது உடனே நின்று விடும்.
கொய்யா
கொய்யாப்பழத்தோலில் ஆரஞ்சுப் பழத்தைவிட பத்து மடங்கு அதிகமாக வைட்டமின் `சி' சத்து உள்ளது. எனவே கொய்யாப்பழத்தை எப்பொழுதும் தோலுடன் சாப்பிடுவது நல்லது.
கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு சற்று நேரங்கழித்து அதை இறக்கி வடிகட்டி அந்தக் கஷாயத்தை சிரங்கு, அக்கி போன்ற தோல்வியாதிகள் உள்ள இடத்தை அலம்பினால் அரிப்பு நீங்கி விடும்.
எக்சிமா, சொறி போன்ற தோல் வியாதிகளுக்கு மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் எளிதில் குணமாகும்.
மிளகு
உணவில் தினமும் மிளகை சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதையும், ரத்தம் ஓரிடத்தில் கெட்டியாக அடைத்துக் கொள்வதையும் போக்கக்கூடியது.
தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறு மற்றும் மனிதத் தெளிவுக்கு சரியான மருந்து.
தோல் நோய்கள், ஜலதோஷம் மற்றும் வைரஸ் கிருமிகளால் தோன்றும் வியாதிகளை எதிர்க்கவல்ல சக்தியை உடம்பில் தோற்றுவிக்கும் எந்திரம் ஆப்பிள்.
மற்ற உணவுப்பதார்த்தங்களைப் போல் அல்லாமல் பற்களில் தங்கும் ஆப்பிள் எந்தவித நாற்றத்தையோ அல்லது சொத்தையோ தோற்றுவிப்பதில்லை.
கொலஸ்ட்ரால் அதிகமாக நரம்பினுள் தங்கி ரத்தத்தின் வேகத்தைக் குறைக்கும் போது அதனைத் தடுக்க ஆப்பிளில் மருந்து உள்ளது.
60 கலோரி உள்ள ஒரு ஆப்பிள் உடம்பு எடையை அதிகரிக்காமல் சக்தியையும் ஆற்றலையும் தருகிறது.
எலும்பு தொடர்பான வியாதிகள் எதுவுமே அண்டாது.
தோலை உரிக்காமல் ஆப்பிளை அப்படியே சாப்பிடவேண்டும்.
ஆப்பிள் தோலில் அதிக அளவில் வைட்டமின் `சி' மற்றும் தாமிரச்சத்து உள்ளது.
வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்துச் சொல்கிறது வெங்காயம், வெங்காயத்தை உரித்துக் கொண்டே இருந்தால் இறுதியில் ஒன்றுமே இல்லாமல் போகிறது. அது போலத்தான் வாழ்க்கையும்! மிஞ்சுவது இறுதியில் மரணம்தான்!
கிரேக்க விளையாட்டு வீரர்கள் உணவில் வெங்காயத்தை அதிக அளவில் சேர்த்துக் கொண்டார்கள். இடைப்பட்ட காலங்களில் மருத்துவர்கள் தலைவலி, பாம்புக்கடி ஆகியவற்றுக்கு வெங்காயத்தை மருந்தாகக் கொடுத்தார்கள். வெங்காயச்சாம்பார், வெங்காயப்பச்சடி, வெங்காய சட்னி, வெங்காயப் பக்கோடா ஆகியவைகள் நாவில் எச்சிலை வரவழைப்பவை.
வெங்காயத்தை வெட்டும் போது அதன் செல்கள் உடைந்து ``அல்லினாசிஸ்'' என்ற என்ஸைமை உண்டாக்குகிறது. இது ஸ்ல்பைட்டுகளைப் பிரித்து, கந்தக அமிலங்களை உருவாக்கும். இவை சுலபமாக உடனே ஆவியாகும், வாயுவாகச் சிதைந்து காற்றில் பரவும். கண்களை அடையும்போது ஈரத்துடன் கலந்து நீர்த்த கந்தக அமிலமாக மாறும். இது கண்களை உறுத்த, அந்த எரிச்சலைப் போக்கக் கண்ணீர் உற்பத்தியாகும். வெங்காயத்தை நாம் உரிக்கும் போது, நாம் அழுவதற்கு இதுவே காரணம். வெங்காயத்தைத் தண்ணீரில் நனைத்து வைத்து வெட்டினால், ``அழுகை'' குறையும்.
வெங்காயத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் சத்து நிறைந்தவை. இதில் கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவு, வெங்காயத்தில் வைட்டமின் சி,பி, பொட்டாசியம், தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளன. ஏகப்பட்ட மருத்துவக் குணங்களைக் கொண்டது.
வெங்காயத்தால் உண்டாகும் நன்மைகள்:-
1. வெங்காயத்தில் ``ப்ளாவனாயிட்'' என்னும் வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இதில் உள்ள குயிர்சிட்டின் என்றும் பொருள் கண்புரை, புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றைத் தடுக்கும்.
2. வெங்காயம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும் பணியைச் செய்கிறது.
3. வெங்காயத்தில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகையை முறியடிக்கும்.
4. வெங்காயச் சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நுரையீரல், மூச்சுக்குழாய் கோளாறுகள் சரியாகிவிடும்.
5. வெங்காயம் இருமல், சளிக்கு அருமையான மருந்தாகும்.
6. வெங்காயம், எலும்புச் செல்களின் சிதைவை நிறுத்துகிறது. osteoporosos என்னும் எலும்பு-மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.
7. வெங்காயச் சாற்றை கட்டிகள், காயங்கள், மரு போன்றவற்றுக்கு ஊற்றலாம்.
8. வெங்காயத்தை வாரத்தில் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புற்றுநோய் வராது. வெங்காயத்தில் கந்தகக் கலவை இருப்பதே இதற்குக் காரணம்.
9. வெங்காயம் ஆண்மை வீரியத்தைப் பெருக்குகிறது. சில வெங்காயத்தை நசுக்கி வெண்ணெயில் வதக்கி, ஒரு தேக்கரண்டி தேனுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வீரியம் பெருகும்.
10. வெங்காயத்தில் Allg Propy disulphide போன்ற கந்தகக் கலவைகள் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி அதிக இன்சுலின் கிடைக்கச் செய்யும்.
11. வெங்காயத்துண்டை பல்லிலோ, ஈறிலோ வைத்துத் தேய்த்தால் பல் வலி குறையும்.
12. வெங்காயம் வாயில் போட்டு மூன்று நிமிடங்கள் மென்றால் கிருமிகள் அழியும். (பச்சை வெங்காயம்).
13. வெங்காயத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும். ரத்த ஓட்டம் தடையில்லாமல் இருக்கும்.
14. வெங்காயத்தை ஒரு நாளைக்கு 100 கிராம் சேர்த்துக் கொண்டால் இதயம் வலுவாக அமையும்.
15. வெங்காயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் நிறைந்துள்ளதால் இதய அடைப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
16. வெங்காயம் 2 அல்லது 3 கப் உப்புடன் வேக வைத்து இரவு உணவுக்கு முன், சுடு சாதத்துடன் பிசைந்து சாப்பிட இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
17. வெங்காயம் 10 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அது பாதியாகக் குறைந்ததும் வடிகட்டி, ஆறிய பின்பு, சிறுநீர் எரிச்சலுடன் போகிறவர்களுக்குக் கொடுத்தால் குணமாகும்.
18. வெங்காயம் மூல வியாதியைக் குணப்படுத்தும் ஒப்பற்ற மருந்தாகும்.
19. வெங்காயம் ஜீரண சக்தியை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. பிரியாணி போன்ற கடினமான உணவுகளுக்கு, தயிருடன் வெங்காயத்தையும் சேர்த்துப் பச்சடியாக்கிப் பரிமாறுவது பண்டைக் காலம் தொட்டு இருந்து வருகிறது.
பசியின் கொடுமையைத் தணிப்பதற்காக உண்ணக் கூடாது. உண்பது என்பது ஒருவர் வயிற்றை நிரப்பும் விஷயமில்லை. வாழ்வதற்காக உண்கிறோம். கருப்பை தொடங்கி மண்ணில் பிறந்து முதுமைக் காலம் எட்டும் வரை வாழ்வதற்காக நாம் தொடர்ந்து உண்டுகொண்டே இருக்கிறோம். எனவே பிறப்பு முதல் இறப்பு வரை ஆரோக்கிய உணவை உட்கொள்ள நாம் வலுவான அடித்தளம் அமைக்க வேண்டியது கட்டாயம். இது ஆயுள் முழுமைக்கும் தரமான வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் நமது வாழ்வில் `குழந்தைப் பருவம்' தொடங்கி பல்வேறு பருவங்கள் உள்ளன. ஒவ்வொரு பருவத்திற்குமான உணவு வகைகள் வேறுபடுகின்றன. அந்தந்த பருவத்திற்கான சமச்சீரான உணவு முழுமையான வளர்ச்சிக்கு உதவுகிறது. 1. தொடர்ந்து எடை அதிகரித்தல்
புதிதாய்ப் பிறந்த பச்சிளம் குழந்தை (0 முதல் 7 நாட்கள் வரை) மற்றும் (0 முதல் 1 மாதம் வரை) மற்றும் பால் குடிக்கும் குழந்தை (0-6 மாதம் வரை)
இந்த வயது பச்சிளம் குழந்தையை `வொரேஷியஸ் டிரிங்கர் அதாவது `அதிகம் பருகும்' குழந்தையாகக் கொள்ள வேண்டும். முதல் நாள் 100 மி.லி. தொடங்கி ஆறு மாதங்களில் 1000 மி.லி. வரை இந்தக் குழந்தைகள் அதிக அளவில் பால் அருந்தும். 12 வார அல்லது 4 கிலோ எடை கொண்ட குழந்தைக்கு தாய்ப்பாலுடன் பழரசச் சாறும் கொடுக்க வேண்டும். பழரசம் தேவையான வைட்டமின் சி சத்தைத் தரும். இருப்பினும் ஆரஞ்ச், அன்னாசி, திராட்சை, தக்காளி பழச்சாறுகளை ஆறு மாதங்கள் வரை நிறுத்தி வைப்பது நல்லது. நாளொன்றுக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுப்பது? என்ற கேள்வி பலருக்கு எழலாம். அதற்கான விடை இதோ:
பிறந்த பச்சிளம் குழந்தைக்கு - 24 மணி நேரத்தில் 8 முதல் 10 தடவைகள்
1 மாதக் குழந்தைக்கு - 3 மணி நேர இடைவெளியில், 2-3 மாதக் குழந்தைக்கு - 4 மணி நேர இடைவெளியில். இரவு நேரத்தில் தாய்ப்பால் கொடுத்தால் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கும்
தாய்ப்பாலுடன் மாற்று உணவு உட்கொள்ளும் குழந்தைப் பருவம் (6 முதல் 12 மாதங்கள்)
தாய்ப்பால் மட்டுமே அருந்தி வந்த நிலையில் இருந்து மாறி திரவ மற்றும் கெட்டியான உணவை உட்கொள்ளும் பருவம். ஆனால், இந்தக் குழந்தையால் கெட்டி உணவை மென்று உண்ண முடியாது. இதற்கு `டிரான்சிடரி டிரிங்கர் / ஈட்டர்' என்று பெயர். எனவே, குழந்தை கொஞ்சம் வளர்ச்சி அடைந்ததும், அதாவது, அதன் எடை இரு மடங்காகும்போதுதான் குறிப்பாக 7 கிலோ எடை அல்லது 6 மாதங்கள் ஆன பிறகே கெட்டி உணவைக் கொடுக்க வேண்டும். குடிப்பதற்கு பால் / பழரசங்கள், தானியங்கள், பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை நன்றாக மிக்சியில் மசித்த நிலையில் கூழாகவோ அல்லது கஞ்சியாகவோ உண்ணக் கொடுக்க வேண்டும். திரவ மற்றும் கெட்டி இரண்டும் சம அளவு இருத்தல் அவசியம். இல்லாவிட்டால் குழந்தைக்கு செரிமானம் ஆகாமல் வாந்தி எடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்க மிதமான சீதோஷணம் தேவை. குழந்தை எடுத்துக் கொள்ளும் உணவு திரவம், அரை கெட்டி, மென்மை கெட்டி நிலை என அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும். குழந்தை தான் உண்ணும் உணவு எத்தகையது என்று தெரிந்துகொள்ள அதைக் கிளறி இறைக்கத் துவங்கும்.
* `திரவ வடிவில் இருப்பதைக் குடிப்பதற்கும் கெட்டியாக இருப்பதை ஸ்பூனில் எடுத்து மென்று தின்பதற்கும் உள்ள வேறுபாட்டை குழந்தைக்கு உணர வைக்க வேண்டும்.
* குழந்தை தனக்குத்தானே உண்ண பழக்க வேண்டும்
* இன்றைய குழந்தைகள் மார்புக் காம்பைச் சுவைத்து பால் அருந்துவது பின்னர் கோப்பை மூலம் பால் அருந்துவது சாதாரண விஷயம்.
* ஏழு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும்போது கோப்பையில் அருந்தத் தொடங்கும். இருப்பினும் தாய்ப்பால் அருந்துவதையே விரும்பும். எனவே, இந்த வயதில் நாளொன்றுக்கு ஒரு முறையேனும் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
* `கெட்டியான உணவைச் சில சமயம் அறிமுகப்படுத்தும்போது குழந்தை எதிர்ப்பைக் காட்டும்.
* ``குழந்தை வெவ்வேறு வகையான உணவுகளை ஏற்றுக் கொள்ளும் சராசரியான வயது :
இரண்டரை முதல் மூன்று மாதங்களில் தானியங்கள்
ஐந்தரை முதல் ஆறு மாதங்களில் இறைச்சி மற்றும் இறைச்சி சூப்
இரண்டரை முதல் மூன்று மாதங்களில் பழங்கள்.
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உப்பின் அளவுதான். இது குறித்த சில நிரூபிக்கப்படாத அறிவியல் தகவல்களைப் பார்ப்போம்.
1. குழந்தைகளின் உணவில் உப்பைச் சேர்த்தால் அது ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
2. உப்பைச் சேர்த்துக் கொள்வது ஆபத்தானது என்ற கருத்துக்கும் போதிய ஆதாரம் இல்லை.
3. குழந்தை சேர்த்துக்கொள்ளும் உப்பு அதன் செயல்பாடுகளின் பளுவை அதிகரிக்கும்.
தாயின் தனக்குச் சேர்க்கும் அளவு உப்பை குழந்தைக்குத் தரும் உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. அதிகபட்சம் 0.25% மட்டுமே சேர்ப்பது நல்லது.
ஊட்டச் சத்து தேவையைக் கணக்கிடுவது எவ்வாறு?
2. கொழுப்புச் சத்து சராசரியாக அதிகரித்தல்
3. தசைகள் இறுக்கம் பெறுதல்
4. சந்தோஷமான, நன்கு தூங்கும் குழந்தை தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்தல்
கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் :
* `வாந்தி, வயிற்றுப் போக்கு, மலச் சிக்கல்
`டாட்லர்' : 1 - 2 ஆண்டுகள் வயதுள்ள குழந்தை இவ்வகைப் பிரிவு குழந்தைகளை `எக்ஸ்ப்ளோரேடரி ஈட்டர்' அதாவது எல்லா உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து உண்ணும் பருவம். எதைக் கண்டாலும் அதை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் இயல்பு. உணவை ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் அதைக் கிளறி, கைகளால் எடுத்து உண்ண நினைத்து இறைக்கும். எனவே, கொஞ்சம் மசித்தோ அல்லது நறுக்கியோ குழந்தையின் கைகளில் தர வேண்டும். ஒரு வயதாகும்போது குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்துகொண்டு உண்ணத் தொடங்கும். தாய் உண்ணும் உணவில் சரி பாதி உண்ணும். தானியம், பருப்பு, காய், கனி, பால் மற்றும் பால் பொருட்கள் இதில் அடங்கும். இரண்டு வயதில் முழு முட்டை, இறைச்சி, மீன், கோழி ஆகியவற்றைக் கொடுக்கலாம். புதிய உணவுப் பொருட்களுக்கு மாறும்போது உண்ண மறுத்து கொஞ்சம் அடம் பிடிக்கலாம். தானாக உண்பதற்கு பழக்கப்படுத்துதல் நலம். சுற்றுச் சூழலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்.
கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் :
* ``அதிக அளவு பால் ஊட்டச் சத்து சோகைக்கு வழி வகுக்கும்
* ``சாக் பீஸ், களிமண் ஆகியவற்றை உண் விருப்பம்
ப்ரீ ஸ்கூலர் 3-5 ஆண்டுகள் வயதுள்ள குழந்தை
இவ்வகைக் குழந்தைகள் `ஃபினிகி ஈட்டர்' அதாவது உணவு உண்ண தீவிர முனைவுகள் மேற்கொள்ளும். ஆனால், அனுபவம் இன்மை காரணமாக ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளல் அல்லது வேண்டாம் என்று தவிர்த்தல். சில சமயம் ஒரே மாதிரியான உணவு வகைகளையே உண்ண விரும்பும். ஆனால் இதுவும் நீண்ட நாட்கள் நிலைக்காது.
வீட்டில் மற்றும் பள்ளியில் ஊட்டச் சத்துள்ள உணவை உட்கொள்ள ஊக்கப்படுத்துதல். பிசுபிசுப்பான சர்க்கரைப் பொருட்களை தவிர்க்கவும்.
உணவு உண்ணும் முறை
* `முன் மாதிரியான அறிமுகப்படுத்துதல்
* ``உண்ணும் உணவு குறித்த சில முடிவுகளைக் குழந்தைகளே எடுக்க அனுமதித்தல்
* ``மேஜையில் உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்
உணவு நேரத்தில் அமைதி
கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் :
* ``நோய்க் காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறுதல்
* கொழுப்பு உடலில் சேர்தல்
* பல் சொத்தை
டிவீனேஜர் : 6-9 ஆண்டுகள் வயதுள்ள குழந்தை
இந்தப் பிரிவு குழந்தைகளை `இமிடேடர் ஈட்டர்'அதாவது வீட்டிற்குள்ளேயே ரோல் மாடல்களைத் தேடி அவர்களைப் போன்ற உணவு உண்ண முயலுதல். குழந்தைகள் நன்கு உண்ண உதவுதல். குழந்தைகளின் உணவில் தேவையான ஊட்டச் சத்து இருப்பதை உறுதி செய்தல்.
* ``5-7 ஆண்டுகள் குழந்தை சாதாரண உணவுகளை விரும்பும்
* 6-7 ஆண்டுகள் குழந்தை புதிய உணவு வகைகளை - முன்பு வெறுத்தவற்றை - உண்ண விரும்பும்
* 8 ஆண்டுகள் குழந்தை - உணவுகளால் ஈர்க்கப்படும் - அதீத பசி - முதலில் மறுத்தாலும் பின்னர் உணவின் வாசனை, வண்ணம் ஆகியவற்றால் ஈர்க்கப்படுதல்.
* 9 ஆண்டுகள் குழந்தை - சுவாரஸ்யமான உணவுகள் - உணவு வகைகளை தானே தயாரிக்க விரும்புதல் - வேண்டும் / வேண்டாம் என்று முடிவெடுக்கும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை அறிமுகப்படுத்துதல். உணவு உண்ணும் முறைகளை சொல்லிக் கொடுத்தல். வழிகாட்டுதல்.
* காலை உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ள ஊக்கப்படுத்துதல்.
* ஊட்டச் சத்துள்ள உணவுகளை உண்ண ஊக்கப்படுத்துதல்
* இனிப்பு வகைகளைக் குறைத்தல்
* உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்க உணவு மற்றும் உடற்பயிற்சிகளை ஊக்கப்படுத்துதல். பல் சொத்தை உள்ளிட்ட இடர்கள் ஏற்படாத வகையில் பாதுகாத்தல்
கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள்
* ``நோய்க் காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறுதல்
* ``கொழுப்பு உடலில் சேர்தல்
* பல் சொத்தை
டீனேஜர் அல்லது பருவ வயது 10 -18 வயதுள்ள குழந்தை
இந்தப் பிரிவு குழந்தைகள் `சேலஞ்சர் ஈட்டர்' என்று அழைப்பார்கள். எதையும் சவாலாக எடுத்துக் கொள்ளும் வயதினர் இவர்கள். முன் பருவ வயது (10-12 வருடங்கள்), பருவ வயது (13-15 வருடங்கள்) மற்றும் பின் பருவ வயது (16-28 வருடங்கள்) என்று மூன்றாக இந்தப் பிரிவைப் பிரிக்கலாம்.
போதிய ஊட்டச் சத்து உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?
* எடை, உயரம் தொடர்ந்து அதிகரித்தல், பாலியல் உறுப்புகள் தோன்றுதல், மாதவிடாய் எய்தல்
* முழுமையான வளர்ச்சிக்கு போதிய கொழுபேற்றல் அவசியம்
கவனிக்க வேண்டிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள்
* சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாடுகள்
* சிறுமிகளுக்கு எடை பற்றிய சிந்தனை
ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த சமச்சீரான உணவு குழந்தையின் வளமான எதிர்காலத்திற்கு உதவும்.