|
| ஊறுகாய்
ஊறுகாயை நாம் விரும்பி உண்கிறோம். பாடம் செய்யப்பட்ட எந்தப் பொருளையும் உண்ணக் கூடாது. பாடம் செய்யப்பட்ட பொருட்கள் ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த ரசாயனம் நம்மை மந்தமாக்கும். மூளையினைக் கூர்மையாக இயங்க விடாது. புட்டிகளில் விற்கப்படும் பழரசங்கள், சர்பத்துகளும் கெடுதியானவைகளே. எனவே பாடம் செய்யப்பட்ட உணவு வகைகள் உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.
தூங்குங்கள்
இதய நோயாளிகள் சாப்பிட்ட பின் சிறிது நேரம் தூங்க, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
நரம்புத்தளர்ச்சி
தினமும் இரவு பசும்பாலில் சிறிது குங்குமப்பூவைக் கலந்து சாப்பிட்டு வந்தால், நாளடைவில் நரம்புத் தளர்ச்சி நோய் குணமாகும்.
தேனும் இஞ்சியும்
ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்து தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது இருமல் இருந்தால் குணமாக்கும்.
வாந்தி
புதினாக்கீரையை இடித்து சாறு எடுத்து அதில் சிறிது சர்க்கரையையும் சேர்த்து சாப்பிட்டால் எந்தவித வாந்தியாக இருந்தாலும் அது உடனே நின்று விடும்.
கொய்யா
கொய்யாப்பழத்தோலில் ஆரஞ்சுப் பழத்தைவிட பத்து மடங்கு அதிகமாக வைட்டமின் `சி' சத்து உள்ளது. எனவே கொய்யாப்பழத்தை எப்பொழுதும் தோலுடன் சாப்பிடுவது நல்லது.
கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு சற்று நேரங்கழித்து அதை இறக்கி வடிகட்டி அந்தக் கஷாயத்தை சிரங்கு, அக்கி போன்ற தோல்வியாதிகள் உள்ள இடத்தை அலம்பினால் அரிப்பு நீங்கி விடும்.
எக்சிமா, சொறி போன்ற தோல் வியாதிகளுக்கு மீன் எண்ணெய் சாப்பிட்டு வந்தால் எளிதில் குணமாகும்.
மிளகு
உணவில் தினமும் மிளகை சேர்த்துக் கொள்வது நல்லது. இது ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதையும், ரத்தம் ஓரிடத்தில் கெட்டியாக அடைத்துக் கொள்வதையும் போக்கக்கூடியது.
|
|
0 comments:
Post a Comment