எலுமிச்சை

*சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் எலுமிச்சைப் பழத்துக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.அவசரத்துக்கு வீட்டில் எலுமிச்சை வைத்தியம் செய்து பாருங்கள்.மருத்துவரைத் தேடி அலையாமல் வீட்டு கிச்சனில் உங்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும்!

* எலுமிச்சைப் பழத்தை இரண்டாக அறுத்து நெற்றிப் பொட்டில் வைத்து லேசாகத் தேய்த்தால் தலைவலி குறையும். (காய்ச்சல் இருக்கும்போது இதைத் தவிர்க்கவும்)

* பேதி அதிகமாகப் போனால் உடல் சோர்வு, பலகீனம், குமட்டல், தாகம் அதிகமாக இருக்கும். இவ்வேளையில் எலுமிச்சைப் பழசாறு அருந்தினால் நிவாரணம் உடன் கிடைக்கும்.

* கோழி முட்டையில் நெல்லிக்காய் அளவு எடுத்து, எலுமிச்சை சாற்றில் கலந்து, சிறிது இஞ்சி கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் ஈளை இருமல் குணமாகும்.

* எலுமிச்சை இலையை சிறிது, சிறிதாக வெட்டி நீர்மோரில் சேர்த்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ‘சி’ சத்து கிடைக்கும்.

* தேள் கடித்த இடத்தில் எலுமிச்சைப் பழத்தை அறுத்து, அதன் சாற்றை கடிவாயில் வைத்து தேய்க்க வேண்டும்.எரிச்சல் குறைந்த பின்பு மருத்துவரிடம் காண்பித்தல் நலம்.

* வெந்நீரில் எலுமிச்சைப் பழச்சாற்றை கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு வாய் பிசுபிசுப்பாக இருந்தால் எலுமிச்சைப் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி கொதிநீரில் போட்டு அந்த நீரைப் பருகலாம்.

0 comments:

Post a Comment