இப்படியே கேட்கறப்பல்லாம் அவளுக்கு சாக்லெட்டும் ஐஸ்கிரீமுமா வாங்கிக் கொடுத்து குட்டிச்சுவராக்குங்க.. அப்புறம் சாப்பிடமாட்டே
21.04.10 மற்றவை ங் கிறான்னு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு அலைங்க..’’
குழந்தைகளிடம் பாசத்தைக் காட்டுவதற்காக மனைவியிடம் இப்படி வாங்கிக் கட்டிக் கொள்ளாத அப்பாவே இருக்க முடியாது.. சில வீடுகளில் அப்பாவின் இடத்தில் அம்மா!
ஒரு சின்ன சாக்லெட் விஷயத்தில் இப்படி பதர்ற அளவுக்கு என்ன இருக்கிறது?
காரணம் பெரும்பாலான குழந்தைகள் சாக்லெட், ஜெல்லின்னு விரல் அளவுக்கு சாப்பிட்டுவிட்டு வேறு எதுவுமே தின்பதில்லை. இதை குழந்தை செய்யும் தவறாக எடுத்துக்கொள்வதா, அவர்களின் மாறிவிட்ட ரசனை என்பதா?
முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு குழந்தையிடம் உனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டால், பொரிகடலை, பட்டாணி, காராச்சேவு, கடலைமிட்டாய், கைமுறுக்கு, பனங்கிழங்கு, கொடுக்காப்புளி, நாவற்பழம், நெல்லிக்காய், எலந்தப்பழம் என பட்டியல் தொடரும்... பார்ப்பதற்கு இவை சாதாரணமாகத் தெரிந்தாலும் சத்தும் ஆரோக்கியமும் இதில் இயற்கையாகவே இருக்கும்.
இன்றுள்ள குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள்? 5 முதல் 12 வயது குழந்தைகள் நூற்றுக்கணக்கானவர்களிடம் ஒரு சர்வே எடுத்ததில் கிடைத்த பதில் இதுதான்...
வாழ்க்கை முறையில் நமக்குப் பழக்கமில்லாத இந்த சமாச்சாரங்கள் குழந்தைகளை எப்படி கவர்ந்தது? ‘நொந்தாலும் நூடுல்ஸ் வேகலைன்னாலும் வெரைட்டி ரைஸ்’ என்கிற அளவிற்கு அவர்களை எப்படி இந்த ஜங்க் ஃபுட்டுகள் அடிமையாக்கியது?
‘‘குழந்தைகளை மூளைச் சலவை செய்ததில் மீடியாக்களுக்கு மேஜர் பங்கு உள்ளது. பிள்ளைகளின் டேஸ்டை மீடியாக்கள் புரிந்து வைத்திருக்கும் அளவிற்கு பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை’’ என்கிறார் பல குழந்தைகளை வைத்து பராமரிக்கும் ‘காஞ்சனா பாட்டி மை கிராண்ட் மா’ஸ்பிளேஸ்’ எம்.டி. ப்ரீதாசுரி.
‘‘எந்த சாப்பாடாக இருந்தாலும் கைகளில் ஒட்டக்கூடாது; கலர் கலரா இருந்தாலும் விதவிதமான டேஸ்ட்ல இருக்கணும் என்பதுதான் இன்றைய குழந்தைகளின் டேஸ்ட். இது ஃபாதர் மதருக்கு தெரியுதோ இல்லையோ பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தெரிந்துள்ளது. அவர்கள் விரும்புகிற மாதிரி ஜங்க் ஃபுட்டுகளை தயாரிக்கின்றனர். நம் தாய்மார்களோ இன்றும் ஒரே மாதிரி தோசை, பிசுபிசுன்னு பருப்பு சோற்றை பிசைஞ்சு குடுத்தா எந்தக் குழந்தை சாப்பிடும்?
தோசை மீது விதவிதமான கலர்ல காய்கறிகளை பூவாகத் துருவித் தெளித்து தினசரி ஒரு டேஸ்ட்ல, தினசரி வெவ்வேறு வடிவத்தில் கொடுத்துப் பாருங்க... பிஸாதான் ஃபேவரைட்னு சொல்ற பிள்ளைகூட கேழ்வரகு தோசையை சாப்பிட ஆரம்பித்துவிடும்..’’ என்று தாய்மார்களின் தவறை மட்டுமல்லாது அதைத் தவிர்க்கும் ஆலோசனைகளையும் அள்ளிவிட்டார் டயட்டீஷியன் டாக்டர் புவனேஸ்வரி.
‘‘குழந்தைகள் சாப்பிடும் இந்த ஜங்க் ஃபுட் அயிட்டங்கள் அனைத்திலும் அதிகம் இருப்பது கொழுப்புச் சத்து. அதை அளவுக்கதிகமாகச் சாப்பிடும்பொழுது ஒபிஸிட்டி பிராப்ளம் உருவாகி விளையாட்டிலும் படிப்பிலும் அவர்களை மந்தமாக்கிவிடுகிறது. அத்துடன் கூட்டுக் குடும்பம் போன்று பகிர்ந்து உண்ணும் பழக்கத்திற்கும் இடமில்லாமல் போனதால் எதைச் சாப்பிட்டாலும் தாராளமாக சாப்பிடும் சூழ்நிலை உருவாகிவிட்டது. இதுதான் பிரச்னையின் மையம். Naturally they are in danger zone" என எச்சரிக்கிறார் குழந்தை நல மருத்துவர் ரவிசங்கர்.
‘‘குழந்தைகள் ஜங்க் ஃபுட்டை அதிகம் உண்பதால் உடல் எடை கூடுதல் மட்டுமின்றி மூளையையும் பாதிக்கும்’’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் பால்கென்னடி. இப்படி எச்சரிக்கை மணிகள் எத்தனை அடித்தாலும் யார் காதிலும் விழுவதில்லை என்பதுதான் சோகம்!
‘‘ஜங்க் ஃபுட்டுகள் சாதாரணமாக நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் உடலுக்குத் தேவையான சத்துக்களை கிடைக்கவிடாமல் தடுக்கிறது. சின்ன வயதில் பி.பி. போன்ற வயோதிக வியாதியை வரவழைக்கிறது..’’ என்று நம்முள் கிலியை ஏற்படுத்துகிறார் டயட்டீஷியன் டாக்டர் புவனேஸ்வரி.
ஏதோ சென்னையில் மட்டும் இப்படியொரு நிலைமை என்று நினைக்காதீர்கள். சேலம், மதுரை, திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் நிலவரம் இப்படி கலவரமாகத்தான் இருக்கிறது என்பதை நமது சர்வே சுரீரென்று சுட்டிக்காட்டயது..
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment