ஃப்ரெஷ் ஜூஸ் ப்ளீஸ்!

ஃப்ரெஷ் ஜூஸ் ப்ளீஸ்!

பாட்டில் பானங்கள் எதையும் தொடாதீர்கள். புதிதாகப் பிழிந்த பழச் சாறுகளை மட்டுமே குடியுங்கள். ஐஸ் வாட்டருக்குத் தடா போட்டு, மண்பானைத் தண்ணீருக்கு வெல்கம் சொல்லுங்கள்.

கடுப்பு வராது!

மதியம் அரை லிட்டர் மோரில் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துங்கள். சிறுநீர் கடுப்பு கிட்டே நெருங்காது.

என்ஜாய் தி கூழ்!

உடலை குளுமையாக்கும் நம்பர் ஒன் தானியம் கம்பு. ஒரு கப் கம்பு மாவுடன் 2 கப் நீர் சேர்த்து ‘கூழ்Õ சமைத்து நீர் ஊற்றி இரவு முழுவதும் வைத்து விட்டு, காலையில் மோர் ஊற்றி சாப்பிட, எந்த உஷ்ண பாதிப்பும் நம்மை அண்டாது.

நோ வலி!

அரிசியில் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து, ப்ரஷர் பேனில் வேக வைத்து, கஞ்சி செய்து சாப்பிடுங்கள். சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி வரவே வராது.

ஹேவ் ஆனியன்!

உணவில் அதிகமாக வெங்காயம் சேருங்கள். ஆனியன் தோசை, ஆனியன் ஊத்தாப்பம் என்று ஜமாயுங்கள்.

கோ ஃபார் வெஜிடபிள்!

நொறுக்குத் தீனிக்கு பைபை சொல்லிவிட்டு, நிறைய காய்கறி சாலட், முளைப்பயறு, வெள்ளரிப் பிஞ்சு சாப்பிடுங்கள். குளிர்ச்சிக்கு குளிர்ச்சி. எடையும் குறையும்.

டேக் லெமன் ஜூஸ்

வெயிலில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், புறப்படும் முன், எலுமிச்சை சாற்றில் நீரும், உப்பும் கலந்து பருகி விட்டுப் போகவும். இது, உடலில் நீர்ச்சத்தை நிலைநிறுத்த உதவும்.

- எச்.அஹமது தஸ்மிலா,
கீழக்கரை.

கூலான கர்ட்டன்ஸ்!

வெயில் காலம் முழுவதும் வீட்டில் உள்ள ஜன்னல், கதவுத் திரைச்சீலைகள் பச்சை அல்லது நீல வண்ணத்தில் இருக்கவேண்டும்.

கல்கண்டு எங்கே?

வெயிலில் வெளியே செல்லும்போது கைவசம் கல்கண்டு வைத்துக்கொள்ளுங்கள். தாகத்தைத் தணிக்க இது மிகச் சிறந்தது.

கசகசா டிரிங்க்

வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். கசகசாவை மிக்ஸியில் அரைத்துக் கொதிக்க வைத்து பாலோடு சேர்த்துத் துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட வயிற்றுவலி பறந்து போகும். ஒரு தம்ளர் பாலுக்கு ஒரு ஸ்பூன் சர்க்கரையும், இரண்டு ஸ்பூன் கசகசாவும் போடலாம்.

சூரியனையும் கூலாக்க...

வீட்டின் வெளிச்சுவரில் வெள்ளைச் சுண்ணாம்பு அடித்தால் கோடை காலத்து வெம்மையை இது தணித்துவிடும்!

சிம்பிள் டிரிங்க்

நீராகாரத்தில் வெங்காயம் அல்லது காரட் ஒன்றை நறுக்கிப் போட்டு நார்த்தங்காய் வற்றலுடன் 2 தம்ளர் பருகினால் வெயில் காலத்தில் ‘ஏசி’யில் இருப்பதுபோல் உடம்பு இருக்கும்.

முள்ளங்கி சாலட்!

முள்ளங்கி நல்ல குளுமை. கேரட் துருவலில் துருவி உப்பு, அரைமூடி எலுமிச்சைச்சாறு பெருங்காயம் கடுகு தாளித்துச் சாப்பிட வெயிலின் பாதிப்பு இருக்காது.

0 comments:

Post a Comment