தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும். கொதித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து... கேழ்வரகு மாவு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறவும். ஆறியவுடன், அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சிறு உருண் டைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையையும் தயார் செய்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.


0 comments:

Post a Comment