அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிறவர்களுக்கும், பெரியபெரிய துண்டுகளாகவும், கவளங்களாகவும் உணவை விழுங்குபவர்களுக்குமே செரிமானக் கோளாறுகள் வரும். வயிறு சரியில்லாத நிலையிலும், பசி எடுத்தால் வேக வைத்த காய்கறிகள், பழச்சாறு, மோர் போன்றவற்றையே சாப்பிட வேண்டும். உணவுப் பாதை நன்கு சுத்தமாகிவிட்டால் நன்கு பசி எடுக்கும்.
NAGARAJI B
உணவு ஜீரணிக்காமல் இருக்கும்போதே மீண்டும் மீண்டும் சாப்பிடக்கூடாது. இதனால் கழிவுகளும் வெளியேறாமல் இருந்து, வயிற்று மந்தத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.
உணவு ஜீரணமாகாமல் இருந்தால், அடுத்த இருவேளையும் பட்டினியாக இருப்பது நல்லது. தக்காளிச் சாறு, ஒரு சிட்டிகை உப்பு போட்ட எலுமிச்சம்பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு, இவற்றுள் ஏதேனும் இரண்டை, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தலாம். இதனால் சாப்பிட்ட உணவுகள் ஜீரணமாகிவிடும்.
உணவு சாப்பிட்டதும் வேகமாக மூச்சு வாங்குதல், ஏப்பம், நெஞ்செரிச்சல், பசியின்மை, அதிகமாகி, காற்று வெளியேறுதல், வாய்க் கசப்பு முதலியன செரிமானக் கோளாறின் அறிகுறிகளாகும். சிலருக்கு வாந்தியும் ஏற்படுவது உண்டு.
செரிமான உறுப்புகளுக்கு வலுவைத் தருவதால் காலையில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்த எலுமிச்சம் பழச் சாறில், ஒருடம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்தவும். இல்லையெனில் அன்னாசிப்பழச்சாறு அருந்தலாம். இரண்டில் எதை அருந்தினாலும் ஒரு மணி நேரம் கழித்தே காபி, தேநீர் அருந்துபவர்கள் அருந்த வேண்டும்.
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் குறைவாகவே சாப்பிடவேண்டும். நன்றாக மென்றபிறகே அடுத்தடுத்து ஒவ்வொரு கவளமாக எடுத்துச் சாப்பிடலாம்.
மாவுச் சத்து உள்ள உணவுகள் உடனே செரிமானமாக வேண்டுமா? சம்பா ரவை முளை விட்ட கோதுமை, பிஸ்தா பருப்பு, பால் போன்ற உணவுகள் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உடனே ஜீரணிக்க வைக்கிறது. இட்லி, தோசையுடன் சட்னி, சாம்பார் நல்லதே!
பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு, பப்பாளி, உலர் திராட்சை (கிஸ்மிஸ் பழம்), ஈரல், முட்டை, பீட்ரூட், கீரை போன்றவை மலச் சிக்கலை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்கின்றன. நாம் ஏற்கெனவே சாப்பிட்ட உணவுகளின் கழிவுகள் வெளியேறாமல் இருந்தால் இந்த உணவுகள் அவற்றை வெளியேற்றி விடுகின்றன. இதற்கு ஓர் எளிய வழி : உலர் திராட்சை, ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் ஆகியவற்றுள் ஏதேனும் இரண்டு பழங்கள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும்.
மூன்று வேளையும் அசைவம் சாப்பிடும் மனிதர்கள், பார்லி கஞ்சி ஓரிரு டம்ளர் அருந்தவும். தரமான புரத உணவான மொச்சையையும், புரதம் நிறைந்த அசைவ உணவுகளையும் பார்லி கஞ்சி, கொண்டைக் கடலை சுண்டல், கீரை வகை போன்றவை உடனே ஜீரணிக்க வைத்துவிடும்.
இரண்டு நாட்களாகப் பசிக்கவே இல்லை. சாப்பிட்டது அப்படியே வயிற்றில் இருக்கிறது என்பவர்கள், அடுத்த மூன்று வேளையும் நன்கு மோர் சேர்த்த ராகிக் கஞ்சி அருந்தினால் போதும். உணவுப் பாதை சுத்தமாகிவிடும்.
கடலைப் பருப்பு, தேங்காய் போன்றவை சேர்த்து பச்சடி, பொரியல் செய்தால், இவை ஜீரணமாகத் தேவையான என்சைம்களைத் தந்துவிடும். செரிமானக் கோளாறுகளை மிக எளிதாக ஒரு நாள் உண்ணாவிரதத்தின் மூலம் குணமாக்கிவிடலாம். இதற்குப் பிறகும் செரிமானக் கோளாறுகள் வராமல் இருக்க அளவான உணவையும், பழங்கைளயும் பத்து முறையாவது மென்ற பிறகே உள்ளே விழுங்கவும். இதனால் குறைவாகவும் உண்ணலாம். நெஞ்செரிச்சலும், அதிகமாகி காற்றுப்பிரிதலும் இருந்தால் மேற்கண்ட முறையில் குறைவான உணவை நன்கு மென்று சாப்பிட்டு வருவதே செரிமானக் கோளாறுகள் வராமல் தடுத்துக் காப்பாற்றும். மேலும் நெஞ்செரிச்சலும் குணமாகும். காற்றுப் பிரிதலும் அடிக்கடி ஏற்படாது.
Welcome
Blog Archive
-
▼
2009
(41)
-
▼
December
(34)
- க்ரீன் டீ
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்......
- Herbal ...food
- Avoid Ulcer...
- பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்
- வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...
- புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை
- நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க
- உடற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங்
- மாரடைப்பு ஏற்படாமல் இருக்க
- உடல் எடையைக் குறைப்பதற்கு-மூன்று எளிய வழிகள்
- புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
- பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க
- காலையில் மூன்று வகையான உணவுகள்
- உடல்வலியைப் போக்கும் உணவுகள
- சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய ...
- இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்
- வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். உணவுகள்
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்
- உணவு மருத்துவம் -நீரிழிவு நோய்!
- உணவு மருத்துவம் -மஞ்சள் காமாலை
- உணவு மருத்துவம்-புற்றுநோய்
- உணவு மருத்துவம் -இரைப்பைப் புண்
- உணவு மருத்துவம் -சீதளபேதி
- இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க
- தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம்.
- புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பு
- வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற.......
- உணவு மருத்துவம்-தம்பதிகளுக்கு
- உணவு மருத்துவம்-நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்கள...
- இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்...
- உணவே மருந்து:
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்...
-
▼
December
(34)
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment