NAGARAJI B உடலுக்கு ஏற்காத உணவுகளும், ஆரோக்கியமற்ற உணவுகளும் வயிற்றுப்போக்கில்தான் முடியும்.
மாவுப் பொருள்கள் சரியாக ஜீரணமாகததால் வரும் வயிற்று உப்புசம், குடல்பகுதி கெட்டுப் போயிருத்தல், அடிக்கடி பேதி மாத்திரை சாப்பிடுவது, ஆண்டிபயாட்டிக் மருந்துகள் அடிக்கடி சாப்பிடுவது போன்றவையும் வயிற்றுப்போக்கை, பேதியை உண்டாக்கும்.
தண்ணீர், காற்று, உணவுப்பொருள்கள் ஆகியவற்றில் உள்ள கிருமிகள், ஒட்டுண்ணிகள் உடலுக்குள் சென்றாலும் வயிற்றுப்போக்கு உண்டாகும்.
பால், சில குறிப்பிட்ட பழச்சாறு, காபி போன்றவையும் பேதியை அதிகரிக்கும்.
காய்கறி சூப், முழுத் தானியங்கள், தயிர் போன்றவை பேதியை, வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும்.
வயிற்றுப்போக்கு குணமாகும் வரை தேநீர், காபி, அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறு போன்றவற்றைத் தவிர்க்கவும். வெந்நீர் மட்டும் அருந்தி ஓரிரு வேளைகள் உண்ணாவிரதம் இருப்பது நல்லது.
வேதனை அதிகம் இருப்பின் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். குறிப்பாக கைக்குழந்தைகளுக்கு மருந்தும், உணவும் மருத்துவரின் ஆலோசனைப்படியே தரப்பட வேண்டும்.
இரண்டு நாள்கள் வெந்நீர் மட்டும் அருந்தி வந்தால் குடலும் உணவுக்குழாய் பகுதியும் நன்கு முழு ஓய்வு எடுத்துக் கொள்ளும்.
வயிற்றுப்போக்கு உடனே குறைய ஆப்பிள் துண்டுகளை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என சாப்பிடலாம். பெரும்பாலும் நான்கு முறை ஆப்பிள் துண்டுகளைச் சாப்பிட்டாலேயே பேதி குணமாகிவிடும். பீட்ரூட் சூப் சாப்பிடலாம். அன்னாசிப்பழம், வில்வப்பழம் போன்றவையும் பேதியை உடனே குணமாக்கும். இவற்றைச் சாறாக அருந்தினால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவதே மிக முக்கியம்.
வெந்நீர் மருத்துவம், பழச்சாறு மருத்துவம், அடுத்து அரிசிக்கஞ்சி, சோளக்கஞ்சி, கோதுமைக்கஞ்சி போன்றவற்றையும் உணவாகச் சேர்த்துக் கொள்வது நல்லது. வெந்நீர் மற்றும் பழ மருத்துவம் பின்பற்றும் வேளைகளில் பசித்தாலோ அல்லது பேதி இருந்தாலோ அரிசிக்கஞ்சியும், கோதுமைக்கஞ்சியும் ஒரிரு வேளை அருந்தலாம்.
மென்பானம் அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கு குணமாகும்வரை பாலையும் தவிர்க்க வேண்டும்.
காரட், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்றவை வயிற்றுப்போக்கின்போது நன்கு சாப்பிட வேண்டிய உணவுகள்.
முதல் முறை வயிற்றுப்போக்கு ஆனதுமே அரிசிக்கஞ்சி சாப்பிட ஆரம்பித்தால் போதும். மூன்று வேளை சாப்பிடும் இந்த அரிசிக்கஞ்சியால் பேதி உடனே குணமாகிவிடும்.
இத்துடன் அரை தேக்கரண்டி வெந்தயத்தை வாயில் போட்டுக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தவும். ஒரு நாள் மட்டும் மூன்று வேளை வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு இரண்டாவது வேளை சாப்பிட்டதுமே கட்டுப்படுத்தப்பட்டு விடும்.
கைக்குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதே பேதியைக் கட்டுப்படுத்தும்.
பேதி குணமாகி ஒரு வாரம் கழித்தே உங்கள் உணவில் மிளகு சேரட்டும். மிளகு சேர்த்த உணவுகள் பேதியை அதிகரிப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வயிற்றுப்போக்கை முன் கூட்டியே தவிர்க்க சமையலில் வெள்ளைப்பூண்டு, மஞ்சள், இஞ்சி, முதலியவற்றைத் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு வேளை கொழுப்பு நீக்கிய தயிர் தலா ஒரு கோப்பை வீதம் சாப்பிடவும். எப்போதும் சுத்தமான உணவுகளையே சாப்பிடவும். ஈமொய்த்த உணவுப்பொருள்களைக் குழந்தைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தினமும் அன்னாசிப்பழச்சாறோ, ஆப்பிள் பழச்சாறோ, அருந்தி வருவதும் வயிற்றுப்போக்கு வராமல் முன் கூட்டியே தடுக்கும்.
Welcome
Blog Archive
-
▼
2009
(41)
-
▼
December
(34)
- க்ரீன் டீ
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்......
- Herbal ...food
- Avoid Ulcer...
- பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்
- வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...
- புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை
- நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க
- உடற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங்
- மாரடைப்பு ஏற்படாமல் இருக்க
- உடல் எடையைக் குறைப்பதற்கு-மூன்று எளிய வழிகள்
- புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
- பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க
- காலையில் மூன்று வகையான உணவுகள்
- உடல்வலியைப் போக்கும் உணவுகள
- சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய ...
- இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்
- வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். உணவுகள்
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்
- உணவு மருத்துவம் -நீரிழிவு நோய்!
- உணவு மருத்துவம் -மஞ்சள் காமாலை
- உணவு மருத்துவம்-புற்றுநோய்
- உணவு மருத்துவம் -இரைப்பைப் புண்
- உணவு மருத்துவம் -சீதளபேதி
- இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க
- தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம்.
- புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பு
- வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற.......
- உணவு மருத்துவம்-தம்பதிகளுக்கு
- உணவு மருத்துவம்-நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்கள...
- இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்...
- உணவே மருந்து:
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்...
-
▼
December
(34)
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment