தாவர வகை உணவுகளி-லிருந்து புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பை தாராளமாகப் பெறலாம். கிட்னி, பீன்ஸ், ஈரல், கோழிக்கறி, முட்டை, மீன், தானியங்கள், விதைகள், தக்காளி, பூண்டு, வெங்காயம், செலரிக்கீரை ஆகியவற்றில் செலினியம் உப்பு தாராளமாக இருக்கிறது.

இயன்றபோதெல்லாம் காளான், ப்ராக்கோலி உணவில் சேர்த்தாலும் செலினியம் உப்பு உடலில் நன்கு சேர்ந்துவிடும்.

இந்த உப்பு தாராளமாக இருந்-தால் தோல், முடி, கண்கள் போன்-றவை ஆரோக்கியமாகத் திகழும். செலினியம் ஆண்-கள் மலட்டுத்தன்மை அடையாமல் பாதுகாக்கிறது. ஆண்மையை அதிகரிக்-கிறது. மூட்டு வலி ஏற்படாமல் பாது-காக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன் தைராய்டு சுரப்பியில் தேவையான இயக்குநீர் நன்கு சுரக்கவும் வழி செய்கிறது. எனவே, குறைந்த பட்சம் தினமும் வெள்ளைப் பூண்டும், வெங்காய தயிர்ப்பச்சடியும் உணவில் நன்கு சேருமாறு பார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் செலினியம் உப்பு உடலுக்கு நன்கு கிடைத்துவிடும்.

தினமும் மாதுளம் பழச்சாறு!
ஒருவருடம் தினமும் ஒரு டம்ளர் மாதுளம் பழச்சாறு அல்லது ஒரு பெரிய மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு முழுமையாகக் கட்டுப்-படும். கொலஸ்ட்ரலும் கரைக்கப்படும் என அமெரிக்கா-வில் பரி-சோதனைச்-சாலையில் ஒரு வருடம் மாதுளம்-பழச்சாறு அருந்தி வந்தவர்களை தொடர்ந்து கண்-காணித்து வந்ததில் உறுதி செய்யப்-பட்டுள்ளது. பொறாமைக் குணத்தை ஒழிப்பதில் மாதுளை முதலிடத்தில் இருக்கிறது.

பீட்ரூட் சாப்பிட மறவாதீர்கள்:
பீட்ரூட் கிழங்கு சாப்பிட மறவா-தீர்-கள். காரணம், இதில் ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்றவை உள்ளன. மேலும் பீட்ரூட் கீரையில் மிகச் சிறந்த அளவில் கால்சியம், பீட்டா கரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை உள்ளன. சமைக்கப்பட்ட பீட்ரூட் கிழங்-கில் ஃபோலேட் அதிக அளவாக உயர்ந்து அதிக இரத்த அழுத்தம், ஞாபகமறதி நோயான அல்ஜீமர்ஸ் போன்றவை வரா-மலும் முன்கூட்டியே தடுத்தும் விடுகிறது.

ஜெர்மனியில் பீட்ரூட் சாறு எல்லா இடங்களிலும் விற்பனை செய்யப்-படுகிறது. லெட்டூஸ், பசலைக்கீரை போன்றவற்றில் உள்ளதைவிட அதிக-மாக பீட்ரூட் சாறில் மட்டுமே நைட்-ரேட் உப்பு அதிகம் உள்ளது. இது நைட்ரிக் ஆக்ஸை-டாக உடலில் மாறி இரத்தக் குழாய்களின் இறுக்கத்தைத் தளர்த்தி-யும், இரத்தத்தைக் கட்டிப்படாமல் காப்பாற்றி இதன்மூலம் அதிக அளவு ஆக்ஸிஜனை உடலுக்கு வழங்குகிறது. இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்க பீட்ரூட், பசலைக்கீரை, லெட்டூஸ் நன்கு உணவில் சேர்த்து வாருங்கள்.

இனிப்புவகை உணவுகள் உங்களை புத்திக்கூர்மையுள்ள மனிதராககூட உறுதியாக உயர்த்தும். எனவே, உங்களுக்குப் பிடித்தமான இனிப்பு வகையை அவ்வப்போது அளவாகச் சாப்பிட வேண்டும். மிகவும் சிறப்பு, சர்க்கரைப் பொங்கல், ரவையில் தயாரிக்கப்படும் உக்காரை (உக்ரா) போன்றவை உடலுக்கும் கெடுதல் செய்யாமல் மூளையை புதுப்பித்து உற்சாகப்படுத்தும்.

முந்திரிப் பருப்பு நல்லதா?

மற்ற கொட்டை வகையை-விட கொழுத்த சரீரம், சிறு-நீரகக்கல் முதலியவற்றை முறியடிப்பதில் முந்திரிப் பருப்பு முதலிடத்தில் இருக்கிறது. நெய் உட்பட எதிலும் வறுக்காமல் அப்படியே முந்திரிப் பருப்பை சாப்பிடுவதே முக்கியம்.

முந்திரிப் பருப்பில், மகனீசியம் உப்பு தாராளமாக இருப்பதால் எலும்பு மண்டலமும், பற்களும் உறுதியாக, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள செம்பு, சக்தியை உடலுக்குத் தரு-கிறது. மேலும் ஆன்ட்டிஆக்ஸி-டென்ட்டு-களை உடல் நன்கு பயன்-படுத்திக் கொள்ள பாதுகாப்பாக இருந்து இந்த செம்பு சக்தி உதவு-கிறது.

இதயம் தொடர்பான அனைத்-துப் பிரச்னைகளையும், கொழுத்த சரீரத்தையும், நீரிழிவையும் குறைப்-பதில், குணமாக்குவதில் முதலிடத்-தில் இருக்கிறது முந்திரிப்பருப்பு. இதில் தாராளமாக உள்ள இரும்புச் சத்து இரத்த அணுக்கள் சரியாகச் செயல்படவும், செரிமானப் பொருள் வகை சிறப்பாகச் செயல்படவும் ஊக்குவிக்கிறது. அளவுடன், தவற-விடாமல் தினமும் சாப்பிட வேண்-டிய அரிய பருப்பு, முந்திரி. வறுத்து சாப்பிட்டால் உடல் பரும-னாகும்.

0 comments:

Post a Comment