NAGARAJI B

ந்த வயது ஆண், பெண் என்றாலும் உடல் உழைப்புத் தேவை. துணி துவைத்தல், தோட்ட வேலை போன்றவற்றின் போதும் இரத்த ஓட்டம் தலை முதல் கால்வரை சீராக இருக்கிறது.

குளிர்சாதன வசதியுள்ள வீடு, அலுவலகம், கார்களில் வசிப்பவர்கள் உடலுக்கு வைட்டமின் டி தேவை. இவர்கள் காலை பத்துமணி முதல் பகல் இரண்டு மணிக்குள் வெயிலில் நடப்பது, வேலை பார்ப்பது போன்றவற்றை வைத்துக் கொண்டால் வைட்டமின் டியை உடல் நன்கு தயாரித்துக் கொண்டு விடும் என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த உணவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யோகாசனம், உடற்பயிற்சியைப் போலவே, இந்த உணவுகள் பலன்களை அள்ளித் தருகின்றன.

எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஓய்வு நேரத்தில் கவலைப்படாமலும் ஓய்வெடுத்தால் உங்கள் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது என்று பொருள்.

இனி உணவுகள்:

முதலில் துத்தநாக உப்புச் சத்து தாராளமாக உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொட்டை வகை, விதை வகை, பருப்பு வகை, போன்றவற்றில் உள்ள இந்த உப்பு பிராஸ்டேட் சுரப்பி சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. பாதாம் பருப்பு, எள்விதை, பாசிப்பருப்பு போன்றவற்றில் இந்த உப்பு தாராளமாக இருக்கிறது. `முட்டை, இறைச்சி போன்றவற்றிலும் இந்த உப்பு அதிகம். சிறு நீரகத்தை பாதுகாத்து ஆண்மைக் குறைவு ஏற்படாமலும் இது தடுக்கிறது.

அடுத்து கீரைவகை, முளைவிட்ட தானியங்கள், கடலை வகை போன்றவற்றையும் தினமும் தவறாது உணவில் சேர்த்து வரவும். இதன் மூலம் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, செலினியம் போன்ற நோய் நச்சுமுறிவு மருந்துகள் தொடர்ந்து உடலுக்கு கிடைத்துவிடும்.

மூன்றாவதாக கால்சியம் சத்து நிரம்பிய பால், தயிர் கேழ்வரகு, கொழுத்த மீன் போன்றவற்றையும் உணவில் சேர்க்கவும்.

மேற்கண்ட மூன்று வகையான உணவுகளும் செல்களை வயதாவதால் சீரழித்து நோய்கள் உண்டுபண்ணுவதை உடனே தடுக்கும். இதன் மூலம் செல்களை சீரழிக்கும் ஃப்ரீராடிக்கல் என்னும் திரவம் அதிகம் சுரக்காமல் தடுக்கும். இதனால் இரத்த ஓட்டம் எல்லா உறுப்புகளுக்கும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்படும். கணவனைப் போலவே மனைவிக்கும் தாம்பத்யத்தில் ஆர்வம் இருந்தால் இரத்த ஓட்டம் எல்லா உறுப்புகளுக்கும் சீராகச் செல்கிறது என்று அர்த்தம். இல்லையெனில் மேற்கண்ட உணவுதான் மருந்து.

மேலும் நம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு இருந்தால்தான் இரத்தக் குழாய்களும், தசைப்பகுதியும் இறுக்கமின்றி ஓய்வாக இருந்து இரத்த ஓட்டம் தடையின்றி இருக்க உதவும். வால்நட், கோழிக்கறி, பிஸ்தா பருப்பு, வெண்ணெய், நெய் போன்ற உணவுகள் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு தயாரிக்க உதவுகிறது. கறுப்பு நிற சாக்லெட்டில் உள்ள ஆர்ஜினைன் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு தயாரிக்க பெரிய அளவில் உதவுகிறது. இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்து வரவும்.

சோம்பலாகவும் ஆர்வம் இன்றியும் இருந்தால் மிக உற்சாகத்துடன் வாழ இந்த உணவுகள் உதவும். தினமும் துள்ளலுடன் வாழ மேற்கண்ட உணவுகள் சிறந்த உணவு மருந்துகளும்கூட!

வைட்டமின் `சி ' நல்லதா?

ஆப்பிள், தக்காளி, சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உடலில் புற்றுநோய்க் கட்டிகள் தோன்றாமல் தடை செய்கின்றன. அடுத்து இரத்தம் கெட்டியாகாமல் தடையின்றி ஓட வழி செய்கின்றன. பார்வைத் திறனைப் பாதுகாத்து காட்ராக்ட் அபாயத்தைத் தவிர்க்கிறது. மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மூட்டு வலி ஏற்படாமலும் தடுக்கிறது. வந்துவிட்டால் உடனே குணமாக்குகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எல்லாவற்றையும்விட நமது தோலைப் பளபளப்பாக்குகிறது. திராட்சை சாறு, மாதுளம் பழம், ஆரஞ்சு என வைட்டமின் சி நிறைந்த பழங்களை விடாப்பிடியாக ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் இளமைத் துடிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வதை உணரலாம்.

0 comments:

Post a Comment