NAGARAJI B

ருத்துவ சிகிச்சையுடன் உணவு மருத்துவத்தையும் பின்பற்றினால் புற்றுநோயாளிகள் விரைந்து குணம் பெறுவார்கள்.

முதலில் கல்லீரலைப் பலப்படுத்தும் விதத்தில் வைட்டமின் சி தாராளமாக உள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, பேரிக்காய், அன்னாசி போன்றவற்றை மாற்றி மாற்றிச் சாறாக அருந்தி வரவேண்டும். ஒருவாரம் பழச்சாறுகளையே அருந்தி வந்தால் கல்லீரல் பலம் பெற்றுவிடும்.

தேவைப்படின் அரிசிக் கஞ்சி அருந்தலாம், பழச்சாறு மட்டும் அருந்தும் காலத்தில்.

மூன்று வேளையும் அசைவ உணவு சாப்பிடும் மனிதர்கள் தினமம் மாதுளம் பழச்சாறு அருந்த வேண்டும். காரணம், புற்று நோய்க் கழலைகளை வளரவிடாமல் தடுக்கும் எல்லா ஜிக் அமிலம் மாதுளம் பழத்தில்தான் நிறைய உள்ளது. எனவே, தினம் ஒரு மாதுளம் பழம் சாப்பிட முயற்சி செய்யுங்கள். குறிப்பாக ஆரோக்கியமாக உள்ளவர்களும்!
ஒரு வாரத்திற்குப் பிறகு டாக்டரின் மருந்துகளுடன் ஊட்ட உணவையும் பின்பற்றி வந்தால் புற்றுநோய் முற்றிலும் குணமாகும்.

புற்றுநோய் என்றால் என்ன?

உடலுக்குள் நம்மையுமறியாமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்து இறுதியில் உயிரைக் கேட்கிற ஒரு சதை வளர்ச்சிதான் புற்றுநோய்.

சுற்றுப்புறச் சூழ்நிலைதான் புற்றுநோய் ஏற்பட மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. தொழிற்சாலைகள் அருகில் வசிப்பவர்களுக்கும், ஊட்டக் குறைவு உள்ள உணவுவகைகளைச் சாப்பிட்டு வருகிறவர்களுக்கும் புற்றுநோய் வரும்.

குறிப்பாக இறைச்சியில் உள்ள புரதம் புற்றுநோயைத் தோற்றுவிக்கிறது. இதில் உள்ள அமோனியா புற்று நோய்க் கழலைகளை உற்சாகமாக வளரச் செய்கிறது. அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள், சோள எண்ணெய், மது அதிகமாக அருந்துதல், புகைபிடித்தல், செயற்கை நிறங்கள் சேர்த்த இனிப்பு உணவுகள் போன்றவையும் புற்று நோய்க் கழலைகளை வேகமாக வளரச் செய்கின்றன.

வெள்ளைப்பூண்டு பற்களை (6, 7 பற்கள்) நல்லெண்ணெயில் வதக்கிக் காலை உணவுடன் சாப்பிட்டு வரவும். சமையலிலும் பூண்டு சேர வேண்டும். முட்டைக்கோஸ், சோயாமொச்சை, வெங்காயம், காரட், தக்காளி, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கறிகள், பழங்கள், மீன், தேநீர், பால் போன்றவை புற்று நோய் வராமல் தடுக்கும் அரிய உணவுகளாகும்.


புற்றுநோய் வந்து விட்டால் இதை வளரவிடாமல் தடுப்பவை, வெள்ளைப் பூண்டு, மீன், நண்டு, முட்டைக் கோஸ், ப்ராக்ககோலி போன்ற உணவுகளே!
சமையலில் எண்ணெயைத் தவிர்ப்பது நல்லது.

தினமும் இரண்டு டம்ளர் ஆரஞ்சுச்சாறு அருந்தவும். அல்லது மூன்று பழங்களாவது சாப்பிடவும். புற்றுநோய்க் கழலைகளை இதில் உள்ள சத்துகள் வேருடன் அழிக்கின்றன. புற்றுநோய் இருந்தாலும் முழுவதும் குணமாகி நீண்ட நாட்கள் நலமுடன் வாழ முளைவிட்ட கோதுமை, பார்லி அரிசி, மீன், சம்பாரவை, ஓட்ஸ், கைக்குத்தல் அரிசி, மாதுளை, டர்னிப் கீரை, ஆரஞ்சு, பூண்டு போன்ற உணவுகள் தினமும் உணவில் சேருமாறு பார்த்துக் கொண்டால் உடலின் திசுக்களுக்கும், இணைப்பு அமைப்புகளுக்கும் செலினியம் தாது உப்பு தாராளமாகக் கிடைத்து இவை நச்சு முறிவு மருந்தாகச் செயல்பட்டு புற்றுநோய்க் கழலைகள் உருவாகாதபடி பாதுகாக்கும். வளர்ந்துள்ள கழலைகளையும் கட்டுப்படுத்தி ஆயுளை நீட்டிக்கும். ஆரோக்கியமானவர்களும் இதனால் புற்றுநோயின்றி நீண்டநாட்கள் நலமாக வாழலாம்.

0 comments:

Post a Comment