NAGARAJI B

ஞ்சள் காமாலை நோய் வைரஸினால்தான் பரவுகிறது. கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பது, சுத்தமில்லாமை, சுகாதார வசதிக்குறைவு, முதலியவற்றால் இந்த நோய் வருகிறது.

இரத்தத்தைச் சுத்தம் செய்யவும், விஷப்பொருள்களை அகற்றவும் உதவும் உறுப்பு, ஈரல். இது வயிற்றின் அடியில் வலது அடி விலா எலும்புக்குக் கீழே இருக்கிறது.

இந்த ஈரலோடு தசையாலான ஒரு சிறு பை இணைக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பித்தப்பை என்று பெயர். ஈரலில் பச்சை நிறமுள்ள திரவம் சுரக்கிறது. இந்தத் திரவம் பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது.

கொழுப்புச் சத்து நிரம்பிய உணவு வகைகளைச் செரிக்க வைக்க உதவுகிறது இந்த நீர்.

இந்த நீர் அதிகமாகச் சுரந்தால் இரத்தத்தில் பித்த நீர் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக கண்களும், தோலும் மஞ்சள் நிறமாகின்றன. சிறுநீரும் மஞ்சள் நிறமாக பிரிகிறது. சில சமயங்களில் வலது அடி விலா எலும்புக்குக் கீழே வலி வருவதும் உண்டு.

இதுவே மஞ்சள் காமாலை நோய்.

கடுமையான மஞ்சள் காமாலை நோயைத் தடுத்துக் கொள்ளும் தடுப்பு ஊசியை முன்கூட்டியே எல்லா வயதுக்காரர்களும் போட்டுக் கொள்வது நல்லது.

மேற்கண்ட அறிகுறிகள் தோன்றியவுடனேயே காய்ச்சலும், பசியின்மையும் ஏற்படும். உடனடியாக அலோபதி மருத்துவத்தின் மூலம் ஓய்வில் இருந்து சிகிச்சை பெறுவதே பாதுகாப்பு. முழுமையாகக் குணம் பெற டாக்டரின் நேரடிக்கண்காணிப்பே சிறப்பானது.


இத்துடன் உணவு மருத்துவத்தைப் பின்பற்றினால் விரைந்து நலம் பெறலாம்.

கீழாநெல்லியை அரைத்துச் சாப்பிடலாம். கரிசலாங்கண்ணிக்கீரையையும் சமைத்துச் சாப்பிட வேண்டும். இக்கீரை சிறுநீர் மலம் முதலியவற்றை வழக்கமான நிறத்திற்கு உடனே மாற்றும்.

கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் திராட்சை சாறு குணப்படுத்துகிறது. 100 கிராம் திராட்சையில் 87% தண்ணீரும் பொட்டாசியம் உப்புமே உள்ளன.

இவை நீண்ட நாள்களாக இருக்கும் அஜீரணக் கோளாறுகளையும், கல்லீரல் கோளாறுகளையும் குணப்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக இரத்தத்தையும் நன்கு உற்பத்தி செய்கின்றன.

காலையில் தக்காளிப் பழச்சாறு அருந்தவும். இந்தச் சாறில் ஒரு சிட்டிகை உப்பும், ஒரு சிட்டிகை மிளகுத்தூளும் சேர்த்து அருந்தவேண்டும். இது கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகளை குணமாக்கும். தினமும் காலையில் ஒரு டம்ளர் தக்காளி சாறு அருந்தி வருவது குடிகாரர்களுக்கும், கொழுப்பு, இனிப்பு உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கும் நல்லது. மஞ்சள் காமாலையை முன் கூட்டியே இதன் மூலம் இவர்கள் தடுத்துக் கொள்ளலாம்.

இளநீர், ஆரஞ்சுசாறு, எலுமிச்சம் பழச்சாறு, சாத்துக்குடி, பேரிக்காய் போன்றவை கல்லீரல் சம்பந்தப்பட்ட எல்லாவிதமான நோய்களையும் குணமாக்கும். மஞ்சள் காமாலை குணமாகும் வரை மேற்கண்ட உணவுகள் தினமும் இடம் பெற வேண்டும். இளநீர் இரண்டு வேளை அவசியம் அருந்த வேண்டும்.

கரும்பை மென்று சாப்பிட வேண்டும். முட்டைக்கோஸ், சோயாமொச்சை, பச்சைப்பட்டாணி முதலியவற்றால் தயாரிக்கப்பட்ட காய்கறி சூப்பில் கல்லீரலைப் பலப்படுத்தும் வைட்டமின் கே (ரி) தாராளமாக இருக்கிறது. எனவே, இந்த சூப்பையும் ஒரு வேளை அருந்தவும். மஞ்சள் காமாலையை முன் கூட்டியே தவிர்க்க மதுவைத் தொடவே கூடாது.

காய்ச்சிய தண்ணீரையே குடிப்பது, வெளி இடங்களில் சுடுதண்ணீரே அருந்துவது, பழங்கள் காய்கறிகளை நன்கு கழுவிய பிறகே சாப்பிடுவது, சுத்தமாக இருப்பது, சமையலில் இஞ்சியைத் தவறாமல் சேர்ப்பது, கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை முதலியவற்றை வாரம் ஒரு முறை சேர்ப்பது.

இவை எல்லாம் மஞ்சள்காமாலை நோய் வராமல் தடுக்கும் பாதுகாப்பான எளிய வழிகளாகும்.

0 comments:

Post a Comment