NAGARAJI B மாரடைப்பு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் லெசித்தின் என்ற அமினோ அமிலம் தொடர்ந்து இருக்கவேண்டும். இந்த அமிலம் கொலஸ்ட்ரல் இயற்கையாகக் கரைய உதவி செய்கிறது. தொடர்ந்து இந்த அமிலம் இரத்தத்தில் இருக்க தாவர எண்ணெய் வகையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் போதும்.
எடை குறைய...
சத்துணவை அளவுடன் சாப்பிடச் சிபாரிசு செய்கின்றனர். காரணம், எந்த வயதுக்காரராக இருந்தாலும் சரி, தினமும் ஒரு கிலோமீட்டர் வீதம் 55 நாட்கள் நடைப்பயிற்சி செய்தால்தான் நம் உடல் எடையில் அரைகிலோ மட்டுமே குறையும். எனவே, மிகச் சிறந்த சத்துணவு என்றாலும் அளவுடன் சாப்பிட்டால் போதும். தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சியும் செய்து வரவேண்டும். இதுவே எடை குறைய வழி.
நீண்ட நாள் வாழ விரும்புங்கள்!
உடல்நலம், குடும்பப்பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை என எந்த வகைப் பிரச்னை இருந்தாலும் நீங்கள் நீண்டநாள் வாழ உண்மையில் ஆசைப்படுங்கள். முழு விருப்பம் கொள்ளுங்கள். நீண்டநாள் வாழ உண்மையில் விரும்பினால் முதல் கட்டமாக உங்கள் மனமும் உடலும் இறுக்கங்களில் இருந்து விடுபடுகின்றன. இதனால் முழுசுதந்தரம் அடைகிறீர்கள். கடுமையான நோயும் கட்டுப்படத் தொடங்குகிறது. இது எப்படி? உங்கள் மனம் கவலைப்படாததால் அந்தக் கவலையின் இறுக்கங்கள் நாளமில்லாச் சுரப்பிகள் செயல்பட எந்த ஒரு தடையையும் அழுத்தத்தையும் விதிக்கவில்லை. இதனால் தேவையான இயக்குநீர்கள் உடலில் இயற்கையாகச் சுரந்து உடல்நலம் புதுப்பிக்கப்படுகிறது. நோய்கள் குணமாக ஆரம்பிக்கின்றன. தினமும் யோகாசனம் செய்பவர்கள் பெறும் நன்மைகளை இந்த வகையில் எளிதில் பெறுகிறோம்.
மலைப்பிரதேசங்களுக்குச் சென்று வந்தால் மூலிகைக் காற்று உங்கள் உள்ளத்தையும் மூளையையும் சுறுசுறுப்பாக மாற்றிவிடுகின்றன. இந்த நன்மைகளையும் நீங்கள் வாழும் இடத்தில் இருந்தே பெற்றுவிடலாம்.
குடும்பப் பிரச்னை, உடல் நலப்பிரச்னை போன்றவை அகல கவலைப்படாமல் வாழ வேண்டுமானால், மிகவும் பொறுப்புடன் தினமும் இரண்டு வேளை தியானம் செய்து வரவேண்டும்.
தியானம் செய்து வந்தால் மூளையின் திசுக்களில் சேர்ந்துள்ள கார்பன்மோனோ ஆக்ஸைடு போன்ற கழிவுகளை எளிதில் நீக்கமுடியும். தொடர்ந்து தியானம் செய்து வந்தால் இந்தக் கழிவுகள் நீங்கி மனச்சோர்வு, உடற்சோர்வு இன்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கி வாழலாம்.
இது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு ஒரு வாரம் சென்று வந்தால் எந்த அளவு உடல், மனம், மூளை புதுப்பிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு நம்மையும் புதுப்பித்துவிடும்.
நாள் முழுவதும் உழைத்துவிட்டு இரவில் படுத்ததும் உடனே தூங்கி விடுபவரும் தியானம் செய்பவரே! நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உள்ளவரும், தியானப் பயிற்சி இல்லாதபோதிலும் கார்பன்மோனோ ஆக்ஸைடை தன் மூளையில் சேராமல் பார்த்துக்கொள்பவர்தான்.
நமக்கு உள்ள ஒரே எளிய வழி கவலைப்படாமல் பொறுப்புடன் நீண்ட நாள் வாழ விரும்புவது. இதற்காக இரண்டு வேளையும் ஆவலுடன் தியானம் செய்து வருவது. இதன்மூலம் உணவுக் கட்டுப்பாடு, நோய்களைத் தவிர்த்துக்கொள்ள, குணமாக்கிக் கொள்ள எப்படி வாழவேண்டும் என்ற விழிப்புணர்வு எப்போதும் நம்மிடம் இருக்கும். இதனால் ஒரே சமயத்தில் உடல்நலத்திலும் மனநலத்திலும் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும்.
கண்ணதாசன், வாலி எழுதிய பழைய திரைப்படப் பாடல்களையே இன்றும் இருபது முதல் முப்பது வயதுக்காரர்கள் கேட்டு மகிழ்கிறார்கள். சூப்பர் சிங்கர் போன்ற போட்டிகளிலும் இந்தப் பாடல்களையே அதிகம் பாடுகின்றனர். இந்தப் பாடல்களை எந்த வயதுக்காரர் கேட்டாலும் அவர் மூளையில் மெலோட்டனின் என்ற இயக்குநீர் சுரந்து மனதை அமைதிப்படுத்தி இன்பமுடன் வாழச் சொல்கிறது. இந்தப் பாடல்களை போட்டியில் பாடுகிறவர்களுக்கும் இதே மெலோட்டனின் சுரந்து அவர்களைப் பரவசப்படுத்துகிறது. இதனால் போட்டியில் வெற்றி தோல்வி அவர்களை பெரிய அளவில் பாதிப்பதில்லை.
இந்தப் பழைய பாடல்கள் எல்லாம் மிகவும் அக்கறையுடன் பயிற்சி செய்து பாடப்பட்டதால் அந்தப் பாடல்களைப் பாடிய டி.எம்.எஸ்.88 வயதிலும் சுறுசுறுப்பாக வாழ்கிறார். 70 வயதைக் கடந்த பி.சுசீலாவும், எல்.ஆர்.ஈஸ்வரியும் சுறுசுறுப்பாக வாழ்கிறார்கள்.
நாமும் நீண்ட நாள் வாழ உண்மையில் வாழ விரும்பினால் ஒரு பேரமைதி நம்முள் எழுகிறது. அது பழைய பாடல்களைக் கேட்கும்போது சுரக்கும் மெலோட்டனின் என்ற ஹார்மோனை மூளையில் சுரக்க வைத்து உடல்நலத்திலும் வாழ்க்கையிலும் அக்கறையுடன் வாழ, மனஅமைதியுடன் வாழ நம்மைத் தூண்டுகிறது.
எனவே, இன்று முதல் முழு விருப்பத்துடன் வாழ மகிழ்ச்சியுடன் வாழ்வோம். இதுவே ஆயுளையும் அதிகரிக்கும்.
Welcome
Blog Archive
-
▼
2009
(41)
-
▼
December
(34)
- க்ரீன் டீ
- உடல் எடை குறைக்க விரும்புபவர்கள்......
- Herbal ...food
- Avoid Ulcer...
- பாலருந்தும் பழக்கத்தையும் தவிர்
- வெறும் தேநீர் (பால் இன்றி) அருந்தி வந்தால் நோய் எத...
- புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை
- நோய் எட்டிப் பார்க்காமல் இருக்க
- உடற்பயிற்சிகளின் அரசனாக வாக்கிங்
- மாரடைப்பு ஏற்படாமல் இருக்க
- உடல் எடையைக் குறைப்பதற்கு-மூன்று எளிய வழிகள்
- புற்றுநோயைத் தவிர்க்கலாம்!
- பளபளப்பான தோலுடன் காட்சியளிக்க
- காலையில் மூன்று வகையான உணவுகள்
- உடல்வலியைப் போக்கும் உணவுகள
- சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய ...
- இதயத்தைப் பாதுகாக்க சக்தி வாய்ந்த எளிய வழிகள்
- வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும். உணவுகள்
- செரிமானக் கோளாறுகள்
- சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்
- உணவு மருத்துவம் -நீரிழிவு நோய்!
- உணவு மருத்துவம் -மஞ்சள் காமாலை
- உணவு மருத்துவம்-புற்றுநோய்
- உணவு மருத்துவம் -இரைப்பைப் புண்
- உணவு மருத்துவம் -சீதளபேதி
- இருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் தடுக்க
- தரமான வாழ்வை 100 ஆண்டுகள் வரை சராசரியாக வாழலாம்.
- புற்று நோயைத் தடுக்கும் செலினியம் உப்பு
- வால்நட் பருப்பில் ஒமேகா-3 என்ற.......
- உணவு மருத்துவம்-தம்பதிகளுக்கு
- உணவு மருத்துவம்-நீண்ட நாட்கள் வாழ விரும்புகிறவர்கள...
- இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவும் சிறந்...
- உணவே மருந்து:
- ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்...
-
▼
December
(34)
Followers
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment